Monday, June 14, 2010

எனக்கு தெரியாது (1)

எனக்கு தெரியாது ( 1 )

இது வரை நடந்தவை அனைத்தும் மழலையில் என் இனியவை இனி என் வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்கள்

ஆறாம் வகுப்பு : அவிச்சி பள்ளி என் வாழ்கை பாதையை மாற்றிய பள்ளி

அண்ணன் பின்னால் சைக்கிள் பயணம்
அணில்கடித்து போட்ட ஆலம்பழம்
சோள துண்டு கால்பந்து
சத்துணவு வரிசை நண்பனுக்காக
கணக்கு வகுப்பில் தூங்கியது
கண்ணன் என்ற ஒருவன் இந்த வகுப்பில் படிக்கிறான் என்று ஆறு மாதத்திற்கு பிறகு தான் என் வகுப்பு ஆசிரியருக்கே தெரியும்
நுற்றி இருபது பேரின் குரலில் என் குரல் என் வகுப்பு ஆசிரியருக்கு கேட்டிருக்க வாய்பு இல்லைதான்.
வகுப்பறை கடைசி பெஞ்சில் காம்பஸ் கிறுக்கல் (கவிதை)
ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி
எது நல்லது எது கெட்டது ஏதும் தெரியாது
மனதிற்கு என்ன பிடிக்கிறதோ அதைதான் அன்றும் செய்தேன்.

தொடரும் ....,

Thursday, June 10, 2010

மரத்துபோன உணர்வுகளுடன்

நானும் உள்ளேன் தமிழ் நாட்டில்

மரத்துபோன உணர்வுகளுடன்

ஒரு விஷயம் நன்றாக புரிகிறது

அன்றும் ஒற்றுமை இல்லை அதலால் அந்நியன் உள் வந்தான்

இன்றும் ஒற்றுமை இல்லை அதலால் உள் நாட்டிற்குள் அன்னியர்கள்

தமிழனை கொன்று குவித்து விட்டு தமிழை வளர்க்கிரர்களம்

வீரத்திற்கு பேர்போனவர்கள் தமிழர்கள் வீர பாண்டிய கட்டபம்மன் இன்னும் பலர் அவர்கள் அனைவரும் அந்நியனை வெளி அனுப்ப போராடினார்கள்.

 இந்த உள் நட்டு அந்நியர்களை வேர் அறுக்க ஒரு தீ பொறி போதும்

சிக்கி முக்கி கற்களைதான் தேடி கொண்டுஇருக்கிறோம்

மரத்து போன தமிழர்களாக.

Wednesday, June 9, 2010

கல்லறை பூக்கள்

கல்லறை பூக்கள்
கண்ணே கொஞ்சம் கல்லறை பக்கம் வந்து போ இங்கு பூ செடிக்கு தண்ணீர் ( கண்ணீர் ) வேண்டுமாம்

தயவுசெய்து மிண்டும் புன்னகைத்து விடாதே

மீண்டும் ஏமாற என்னால் முடியும்..

ஏமாற்ற நி தயாராக இருந்தால்.

Monday, June 7, 2010

நிம்மதி

என்ன வேண்டும் கேள்
இறைவன் கேட்டான் என்னிடம்

எனக்கு நிம்மதி கொடு என்றேன்
இப்போது வேண்டுமா இல்லை எப்போதும் வேண்டுமா என்றான்

இப்போது என்று சொல்லி பிறகு பிரச்சனை வந்து விட்டால் புத்திசாலிதனமாக எப்போதும் என்றேன்

ஒற்றை வார்த்தை சொன்னான்  இறந்துவிடு  என்று.

எழுத்து பிழை

பிரம்மனுக்கும் எழுத்து பிழை

என் தலை எழுத்து !

எனக்கு தெரியாது

எனக்கு  தெரியாது :

இன்றும் நினைத்தாலும் இனிக்கும்( கசக்கும் ) நினைவுகள்

கண்ணிருடன் மழலையர் பள்ளியில் கால் வைத்தது

வள்ளி டீச்சர் தேவாலயம் கூட்டி சென்றது

மதிய சாப்பாடு மாம்பழ துண்டுகளுடன் ஏன் தாயின் கைகளால்

சங்கீதா வகுப்பு தோழியின் சாக்லேட் பகிர்வு

தாத்தா கடை சிகப்பு மிட்டாய்

இந்த அடியை மறக்காதே என்ற வெங்கட்

வலித்தாலும் சிரித்துகொண்ட அடுத்த நாளுக்காக காத்திருந்தது

எழாவது ரேங்க் எடுத்தது

வாசனை வந்த புதிய புத்தகம்

நட்ராஜ் பென்சில்

கொட்டும் மழையில் நனைத்து கொண்ட வீட்டுக்கு சென்றது


தொடரும் என் நினைவுகள்..,

உரைத்தது

இன்னும் புக் வாங்கவில்லையா என்று எதிர் வீட்டு பையணனின் கேலி பேச்சு தங்க முடியாம

பள்ளியில் எப்போது எங்களை சேர்பிர்கள் என்ற மகன்கள்


உங்களால் ஒன்றும் சாதிக்க முடியாது என்ற மனைவி



பணம் கட்டினால் தான் பிள்ளைகளை வகுப்பறைக்குள்
அனுமதிக்க முடியும் என்ற பள்ளி தலைமை


நான் பணம் கட்டுகிறேன் ஆனால் முழுவதும் இப்போது கட்டமுடியவில்லை
மீதி தொகையை முன்று மத தவணையில் கட்டுகிறேன் என்ற நான்

அது எல்லாம் முடியாது கட்டினால் தான் உள்ளே அனுமதிக்க முடியும் என்ற போது தான் உரைத்தது

கொஞ்சம் தள்ளி படுதிருக்கலாமோ என்று.